அடுத்த வாரம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள்
நாடாளுமன்றம் அடுத்த வாரம் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிளில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayake) தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தனவின் தலைமையில், கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் சில திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
அத்துடன் உர பாவனை தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சி, கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.