நாடாளுமன்ற சமையல் அறை மூடல்
நாடாளுமன்ற சமையல் அறையில் ஊழியர் ஒருவர் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமையினால் அனைத்து ஊழியர்களும் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலைமையினால் நாடாளுமன்ற சமையல் அறை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஊழியருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை சமையல் அறையில் உணவு சமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உதவி செயலாள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற சமையல் அறையில் 5 பேர் வரையில் கடந்த நாட்களாக கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டதென நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri