ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நடந்த சந்திப்பு! மகிந்த அணியினருக்கு ரணில் கொடுத்த உத்தரவாதம்
தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாண்டு பதவி காலம் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உறுதியினை வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேரில் நடந்த சந்திப்பு..
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுவதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் கணிசமான உறுப்பினர்களை நேரில் சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கியதாக கூறப்படுகிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் முழு ஆயுட்காலம் முடியும் வரை பொதுஜன நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடாது என்பது தொடர்பான கலந்துரையாடல்களில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.
தற்போதைய நாடாளுமன்றம் ஒகஸ்ட் 5, 2020 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஒகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நாடாளுமன்றத்தின் இரண்டரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 8 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
