சபை அமர்வின் இடையே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்(Video)
கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை இந்த வரவு செலவு திட்டம் கொடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உரையை ஆரம்பிக்கும் முன்னர், தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய ஏற்றுமதித்துறை 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் அதற்கு மாறாக நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
அதேவேளை கடன் வாங்கும் அளவு குறைந்திருக்க வேண்டும் ஆனால் தற்பொழுது கடன் வாங்கும் எல்லை அதிகரித்துள்ளதுடன் வரி விதிப்பின் அதிகரிப்பினால் மக்களின் வாழ்கைச் சுமை அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
