ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள பகிரங்க சவால்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சவால் விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவை ஜனாதிபதி உறுதி செய்து, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (26.07.2024) கோரிக்கை விடுத்தார்.
பொலிஸ் மா அதிபர்
மேலும் அவர், "பொலிஸ் மா அதிபர் குறித்த பிரச்சினையில் இருந்து ஜனாதிபதி தப்ப முடியாது. இன்றும் அவர்தான் ஜனாதிபதி. அவர் ஜனாதிபதி வேட்பாளராக வந்தாலும் அவரது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது.
பொலிஸ் மா அதிபர் இல்லாதபோது, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது அவரது பொறுப்பு. அதைச் செய்ய முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.
இந்த நிலையில், ஜனாதிபதி அரசியல் சாசனத்துக்கு விரோதமான செயலில் ஈடுபட முயற்சிக்கிறார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
