சிறப்புரிமை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்களதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
32 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது
பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, பிரேணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய, 32 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
