நாடாளுமன்றில் சர்ச்சையைக் கிளப்பிய கருத்து: சாணக்கியனை குற்றஞ்சாட்டும் மக்கள் (Video)
“சுமந்திரனின் செருப்பைச் சாணக்கியன் நக்கினார்” என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி பகிரங்கமாக தெரிவித்துள்ளமைக்கு பொது மக்கள் சார்பில் எமது ஊடகத்திற்கு ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 07.03.2023 அன்று திலீபன் எம்.பி உரையாற்றும் போது, சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாகப் பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர்.
அப்படி இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றிப் பேசுவது நகைப்பாக உள்ளது எனப் பலவாறு சாணக்கியனைப் பேசினார்.
இதற்குச் சாணக்கியன், வன்னி மாவட்டத்தில் ஏதோ தவறுதலாக நாடாளுமன்றம் வந்தவர்கள். அந்த நாட்களிலிருந்து ராஜபக்சக்களின் செருப்பை நக்கிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் சொல்வதைப் பற்றி நான் கணக்கெடுக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பொது மக்கள் சார்பில் எமது ஊடகத்திற்குக் கருத்து தெரிவித்த ஒருவர், ஆரம்பத்திலிருந்து இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். இந்த சம்பவத்தை ஆரம்பித்தது சாணக்கியன். மகிந்த ராஜபக்சவின் காலை செறுப்பை நக்கியவர் பிலேண்டியை குடித்தவர் என்பதை மறந்து விடக்கூடாது... அவரின் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam