போராட்டக் குழுவை சேர்ந்த 4 பேருக்கு எம்.பி. பதவி..!
காலிமுகத்திடல் போராட்டக் குழுவை சேர்ந்த நால்வரை எம்.பிக்களாக நியமிப்பதற்கு அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பதவி விலகி போராட்டக் குழுவை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்த ஆசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சில குழுவினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri