நாடாளுமன்றத்திற்கு பல வாகனங்களில் படையெடுத்த எதிர்க்கட்சியினர்
நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டில்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில் பல்வேறு பதாகைகள் மற்றும் கோஷங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் எரிபொருள் விலையேற்றப்பட்டதனை கண்டித்து அப்போதைய எதிர்க்கட்சியினரான தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டில்களில் நாடாளுமன்றம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri