கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு - Parliament Live
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பல தமிழ் கட்சிகள் ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.