பொதுத் தேர்தலில் போட்டியிடும் யாழ். வேட்பாளர் அதிரடியாக கைது
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான நபர் இன்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam