உலக வங்கியின் நிதி பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைப்பு(Photo)
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில், உலக வங்கியின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளம் என்பன இன்று(17) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பூங்காக்கள்

இதன்படி யாழ்ப்பாண பாசையூர் பூங்கா, இராசாவின் தோட்ட வீதி பூங்கா, மடத்தடி பூங்கா என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்ஜோன் பொஸ்கோ அருகிலுள்ள பிள்ளையார் குளமும் இதன்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வு

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் டி.பி.எஸ்.கே.திசாநாயக்க, யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri