பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்
ஹட்டன் தொடருந்து நிலையத்தில் தனிமையில் இருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை இன்று(19.06.2023) அதிகாலை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் குறித்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரத்தில் வசிக்கும் பெற்றோர்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் தொடருந்தில் பயணித்த அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் அம்பர் என்ற பாடசாலை மாணவன் திங்கட்கிழமை அதிகாலை ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இறங்கி நின்றபோதே பொலிஸாரின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.
தனது பெற்றோர் அநுராதபுரத்தில் வசிப்பதாகவும், தனது குடும்பத்தில் மூத்த சகோதரனும் சகோதரியும் இருப்பதாகவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து தான் பாடசாலை கல்வியை பெற்றதாகவும், 10 ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் போது பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |