தமிழர்கள் விடயத்தில் அரங்கேறவுள்ள கூட்டுச் சதி! கொழும்பில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு என்ற பெயரில் தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் கூட்டுச் சதி அரங்கேறவுள்ளதாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
இந்தக் கூட்டுச் சதி நாடகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து நடத்தவுள்ளதாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,