113இற்கும் மேற்பட்டோர் கையெழுத்து! இன்னும் சில தினங்களில் புதிய அரசாங்கம் (Video)
இன்னும் சில தினங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய தரப்பினருடன் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
இதன்படி தற்போது இணக்கப்பாடுகளுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் இறுதி வரைபை தயாரித்துள்ளோம்.
இப்போது 113 பேருக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் இந்த அரசாங்கம் இன்னும் சில தினங்களுக்கே இருக்கும்.
அடுத்ததாக நீங்கள் என்னை சந்திக்கும் போது புதிய அரசாங்கமே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,