ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ள உத்தரவு (VIDEO)
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினூடாக மோல்னுபிரவீர் கெப்சூல்களை (Molnupiravir Capsule) நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கோவிட் - 19 தடுப்புச் செயலணி கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளுக்கு கிளினிக் செல்லும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சை நிலையத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,