ராஜபக்சர்களின் ஆட்சியை கலைப்பதற்கு தயாராகும் சிங்கள மக்கள் - வெளியாகியுள்ள தகவல்
ராஜபக்சர்களின் ஆட்சியை சிங்கள மக்கள் கலைப்பதற்கு தயாராகி வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தகவல் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள மக்கள் தற்போது விரக்தி நிலைக்கு தளப்பட்டுள்ளனர், சிங்கள பெரும்பான்மை இனத்தின் வாக்குகளை பெற்று விட்டேன் என ஆணவத்தோடு கூறிய ஜனாதிபதி தற்போது சிங்கள மக்களால் துரத்தப்படும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,