வெளிநாடொன்றில் நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானத்தினால் பரபரப்பு
ஸ்பெயினில்(Spain) உள்ள மாட்ரிட்டில் இருந்து உருகுவே தலைநகர் மாண்டி வீடியோவுக்கு ஏர் யுரோபா விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்த போது திடீரென பயங்கரமாக குலுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்ததோடு விமானம் அங்கும், இங்கும் ஆடியதால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.
இருக்கைகள் சேதம்
இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயம் அடைந்த நிலையில் விமானம் வடகிழக்கு பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
A Boeing 787 passenger was thrown onto a luggage rack during severe turbulence. About 40 people were also injured
— NEXTA (@nexta_tv) July 2, 2024
The Air Europa flight was en route from Madrid to Montevideo. During the flight, the Dreamliner hit severe turbulence.
The crew decided to make an emergency landing… pic.twitter.com/VifmXYshMs
விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தமையினால் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏர் யுரோபா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாகவும், காயம் அடைந்த பயணிகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
