சீனாவுக்கான இலங்கையின் தூதர் பாலித்த கொஹன தனது பதவிக்கான சான்றுகளை கையளித்தார்
சீனாவுக்கான இலங்கையின் தூதர் பாலித்த கொஹன சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தனது பதவிக்கான சான்றுகளைக் கையளித்தார்.
ஜனாதிபதி ஜி ஜின்பிங் 29 நாடுகளின் சீனாவுக்கான புதிய தூதர்களின் பதவிச் சான்றிதழ்களை இன்று (புதன்கிழமை) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் அரங்கில் வைத்துப் பெற்றுக்கொண்டார்.
ஆப்கானிஸ்தான், கிரீஸ்,பொஸ்னியா, மடகாஸ்கர், இத்தாலி, திமோர், சூடான், மொரீஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், மால்டோவா, டென்மார்க், பெல்ஜியம், ஓமான், தஜிகிஸ்தான், ஐக்கிய இராச்சியம், வெனிசுலா, ஜப்பான் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பெலாரஸ், அயர்லாந்து, இஸ்ரேல்,கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, ஈராக் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் சீனாவுக்கான தூதர்களே இன்று தமது சான்றிதழ்களைக் கையளித்தனர்.
இதன்போது உரையாற்றிய சீன ஜனாதிபதி,
இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100 வது ஆண்டு நிறைவு பெறுவதாகக் குறிப்பிட்டார். இது சீனாவின் 14 வது ஐந்தாண்டு திட்டத்தின் (2021-2025) முதல் ஆண்டாகும்.
இது சோசலிச நவீனமயமாக்கலுக்கான புதிய பயணத்தைக் குறிக்கிறது.
சீனா ஒரு புதிய அபிவிருத்தி தத்துவத்தைப் பின்பற்றி ஒரு புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்தை வளர்க்கும்.
சீனாவின் வளர்ச்சி அவர்களின்
நாடுகளில் உள்ள மக்களுக்குச் சிறந்த பயன் தரும் என்றும் சீன ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.