இந்தியா மீது டக்ளஸ் முன்வைத்த குற்றச்சாட்டு(Video)
பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கபடாமைக்கு இந்தியாவே காரணம் என கடல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் காக்கை தீவில் இன்று(01) புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விமான சேவை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. விமானங்கள் இங்கு வந்துவிட்டு திரும்பி செல்வதற்கு எரிபொருள் இல்லை.
அத்துடன் இந்தியாவில் இருக்கக்கூடிய சில சட்ட சிக்கல்கள் காரணமாகவும் பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை
இலங்கை அரசினை பொறுத்தவரை, இந்த விமான சேவைக்கு இலங்கை அரசு தனது பூரணமான ஒத்துழைப்பினையும் அங்கீகாரத்தினையும் வழங்குகின்றது.
இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு இந்த விமான சேவைகள் தொடரும்”என கூறியுள்ளார்.