மீண்டும் ஒரே மேசையில் அமரும் அமெரிக்கா - ஈரான்! அழுத்தம் கொடுக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று, தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே ஒரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஈரான் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடரும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு பேச்சுவார்த்தை
இதன்படி, எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை ஈரானிய துறைமுகங்களுக்குத் தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா மற்றும் ஓமான் கடலில் வர்த்தகத்தைத் தடுப்போம் என ஈரானிய ராணுவம் அச்சுறுத்தியுள்ளது.
அதேவேளை, காங்கிரஸால் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும் வரை ஈரான் மீதான அமெரிக்கப் போரினை நிறுத்தக் கோரும் ஜனநாயகக் கட்சியினர் தலைமையிலான தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் சபை எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை News Lankasri