அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் அணி
அவுஸ்திரேலியாவுக்கு (Australia ) எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் (Pakistan ) அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள முகமது ரிஸ்வான் (Mohammed Rizwan ) தலைமையிலான பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும் வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, பேர்த்தில் நேற்று (10) நடைபெற்றது.
22 ஆண்டுகளுக்குப் பின்
போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி, 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 143 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதன்படி அவுஸ்திரேலிய மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.
அதேநேரம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி இழந்துள்ளது.
கடைசியாக 2019ல் இந்தியாவிடம், அவுஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri