பாகிஸ்தானின் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா
பாகிஸ்தான் தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும் அதிகமாக F-16 விமானங்கள் பாகிஸ்தானின் மேற்குப் புறமாக அரேபியக் கடலுக்கு அருகாக Gwadar என்ற பிரதேசத்திலுள்ள Pasni வான்படைத்தளத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தியாவிடம் இருக்கின்ற S-400 ஏவுகணைகள் பற்றிய அச்சம் காரணமாகவே பாக்கிஸ்தான் தன்னிடம் இருந்த F-16 விமானங்களை இந்திய எல்லைகளை விட்டு வெகுதூரம் நகர்த்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த விடயம் பற்றியும், இந்தியாவிடம் உள்ள S-400 வான்பாதுகாப்பு ஏவுகணைகளின் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
