புத்தளம் கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொதிகள்: சந்தேகத்தில் பொலிஸார்
புத்தளம் உடப்பு பிரதேசத்தில் பெரும் தொகையான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையின் உடப்பு பிரதேச உப பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது நேற்று(19) கடலோரத்தில் கரையொதுங்கியிருந்த மூன்று கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா பொதிகள்

இதே வேளை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது உடப்பு, பெரியபாடு பிரதேசத்தின் கரையோரமெங்கும் ஆங்காங்கே கரையொதுங்கியிருந்த ஏராளமான கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா பொதிகளின் பெறுமதி
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் எடை 543 கிலோகிராம் என்றும் அவற்றின் பெறுமதி 145 மில்லியன் ரூபா என்றும் தெரியவந்துள்ளது.

இந்த படகிலிருந்து கிடைக்கபெற்ற கஞ்சா பொதிகள் கடலில் படகு விபத்துக்குள்ளானதன் காரணமாக கரையொதுங்கியிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri