வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதினால் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்கள் உட்பட வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
எமது வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்கள் மாத்திரம் பயன்படுத்திய ஒட்சிசன் தற்போது கொரோனா தொற்றாளர்களுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்த வண்ணமேயுள்ளது.
எனினும், எமது வைத்தியசாலையில் தற்போது தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் காணப்படுகின்றன.
இருப்பினும் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவது தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
