அமெரிக்காவில் கொடூரம்! மூவரை பலி எடுத்த துப்பாக்கி சூடு - அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட முக்கிய தகவல் (VIDEO)
அமொிக்காவின் மிச்சிக்கன் பிராந்தியத்தில் நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Detroit Free Press என்ற செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஒன்றில், 15 வயது மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், ஆசிரியர் ஒருவர் உட்பட்ட 7 பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையிலேயே தாக்குதல் இடம்பெறலாம் என்ற வதந்தி பரவியதை அடுத்து சில மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு செல்லவில்லை என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மாணவர் ஒருவரின் தந்தையான Jody Job தமது மகன் வகுப்பில் ஏதோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த நிலையில் வகுப்புக்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது மகனும் பாதுகாப்பு கரிசனைக் காரணமாக வகுப்புக்கு செல்லவில்லை என்று Robin Redding என்று தந்தை தெரிவித்துள்ளார்.
தமக்கு வகுப்புக்கு செல்வது சௌகரியமாக இல்லை என்று கூறி தமது மகளும் நேற்று செல்லவில்லை என்று மாணவி ஒருவரின் தாய் ஒருவரும் கூறியுள்ளதாக The Detroit Free Press தெரிவித்துள்ளது.
இதேவேளை கோவிட் முடக்கத்துக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் அமொிக்காவில் 138 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 15 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022