பதவி கிடைக்காத ஆளும் கட்சி எம்பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பதவிகள் கிடைக்காத பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்காணிப்பு உறுப்பினர் பதவிகளை வழங்குவது குறித்து அரசாங்கத்தின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் அமைச்சுக்களின் கண்காணிப்பு உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள எனவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்கும் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிப்பதற்கான விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.