டயானா கமகேவுக்கு நீதிமன்றம் விதித்த மற்றுமொரு தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு இன்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
இதேவேளை எந்த கடவுச்சீட்டையும் பயன்படுத்தி வெளிநாடு செல்வதற்கு அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றமைக்காக அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |