வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக தமது கடவுச்சீட்டு மற்றும் பணத்தை ஒரு நிறுவனத்திடமோ அல்லது நபரொருவரிடமோ ஒப்படைப்பதில் அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.
எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது.
அறிவிப்பில் மேலும், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் மற்றும் அது சார்ந்த தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
மோசடிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை
இதுதவிர 1989 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திகொள்ள முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து இடம்பெற்ற பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
