இலங்கையில் புகையிரதங்களில் நிரம்பி வழியும் பயணிகள்
கடந்த சில நாட்களாக புகையிரதங்களில் பயணிகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் வழக்கத்தை விட நூற்றுக்கு ஐம்பது வீதம் எண்ணிக்கையான பயணிகள் புகையிரதங்களில் பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இன்றைய தினம் சில புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க நேர்ந்ததாகவும், நாளைய தினமும் இன்னும் சில புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூரப்பிரதேச ரயில் நிலைய பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு
தற்போதைய நிலையில் தூரப்பிரதேச ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் முடிவடைந்து வருவதன் காரணமாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் இன்றைய தினம் பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஜரட்ட ரெஜிண புகையிரதம் பெலியத்தையில் இருந்து புறப்படும் போதே பயணிகளால் நிரம்பி விட்டது.
அதன் காரணமாக மாத்தறை ரயில் நிலையத்தில் ஏராளம் பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri