அதிகாரிகளை கைது செய்து வாகனங்களை கைப்பற்றுங்கள் : நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்டதாக கூறப்படும், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
10 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணம், அரசுக்கு கிடைப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பில் சட்டவிரோதமாக தரவுகளை பதிவிட கூறிய அனைத்து அதிகாரிகளையும், அவற்றை பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக இந்த வாகனங்களை இறக்குமதி செய்த அதிகாரிகளையும் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
6 வாகனங்கள்
அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய்களுக்கும்; அதிகமான வரிப்பணத்தை கிடைக்கச்செய்யாத வகையில் இறக்குமதி செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு ஜீப் வண்டிகளை கைப்பற்றுமாறும் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவற்றை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்
இதேவேளை, இந்த ஆறு வாகனங்களும் தற்போது காலி, அவிசாவளை, குருவிட்ட, திருகோணமலை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு சொந்தமானவை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 16 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri