ஜனாதிபதி சற்றுமுன்னர் பிறப்பித்துள்ள உத்தரவு
எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு மாத்திரம் இந்த வரிச்சலுகை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமழான் பண்டிகை மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
You may like this video
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam