ஹிசாலினி விவகாரம்! ரிசாட் மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஹிசாலினி என்ற சிறுமி தீப்பரவலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதேவேளை சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ரிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த நால்வருக்கும், 23ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.