சுரேஷ் சாலிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு
அரச புலனாய்வுத்துறையின் தலைவர் சுரேஷ் சாலிக்கு (Suresh Salay) எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல (Buddhika Sri Ragala) உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலமான சர்வதேச கலந்துரையாடல் ஒன்றின் போது அருட்தந்தை சிறில் காமினி (Cyril Gamini), சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சுரேஷ் சாலி ஏற்கனவே குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டில், தாம் தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் ஹாசிமுக்கு (Saharan Hashim) நிதியுதவி செய்ததாக அருட்தந்தை சிறில் காமினி குற்றம் சுமத்தியிருந்தார் என்று சாலி குறிப்பிட்டிருந்தார்.
இந்தக்குற்றச்சாட்டு காரணமாக தமக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சாலி தமது முறைப்பாட்டில் தொிவித்திருந்தார்.
இந்தநிலையில் குற்றப்புலனாய்வுத்துறையின் இது தொடர்பான சமர்ப்பணத்தை பரிசீலனை செய்த நீதிவான், விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்தார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri