பணிப்பகிஷ்கரிப்புக்கு திருகோணமலையிலும் ஆதரவு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் வெளிநோயாளர்கள் பிரிவுகளும் இயங்கவில்லை, இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மார்ச் 01 கருப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு 40 தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கு திருகோணமலை மாவட்டத்திலும் பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
பணிபகிஷ்கரிப்பு
அந்த வகையில் திருகோணமலை - மூதூர் நகரிலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்றன மூடப்பட்டிருந்தன. இதனால் சேவை பெற வருகைதந்தோர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை - கிண்ணியா தள வைத்தியசாலை - மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், மருந்து கலவையாளர்கள், எக்ஸ்ரே பிரிவினர் பணிபகிஷ்கரியில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்திய சேவை பெற வருகைதந்தோர் திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபட்டாலும் கையில் கருத்தப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் வைத்தியசாலையின் அவசர பிரிவு மாத்திரமே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ Cineulagam

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri
