கோவிட் மரணங்களே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு!ரோஹித அபேகுணவர்தன
நாட்டில் 5வது கோவிட் அலை ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அத்தனை மக்களுக்கும் எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும், ஏனெனில் கோவிட் மரணங்களே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல திருத்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் திரிபடைந்து வருகின்றது. இது மீண்டும் இலங்கையைத் தாக்குமானால் தடுப்பூசியால் கூட கட்டுப்படுத்த முடியாது.
எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தினமும் எச்சரிக்கின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சி கோவிட்டின் 5வது அலை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன் அதற்கு அழைப்பும் விடுக்கின்றது. இது அசிங்கமான அரசியல்.
ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம். ஆடிப்பாடி, வெடிகள் கொளுத்தி போராட்டம் செய்கின்றனர். இன்னொரு புறம் ஆசிரியர்கள் போராட்டம். இவற்றுக்கு எதிர்க்கட்சியே அனுசரணை.
2022ஆம் ஆண்டுக்கான பாதிடு கூட்டத் தொடர் நிறைவடைவதற்கு முன்னர் முடிந்தளவுக்கு போராட்டங்களைச் செய்வதே இவர்களின் நோக்கம்.
எதிர்க்கட்சி கோவிட்டை பயன்படுத்தி அசிங்கமான அரசியல் செய்கின்றது. கோவிட் மரணங்களே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும். அதனால் தான் கோவிட்டின் 5வது அலைக்கு அழைப்பு விடுக்கின்றது.
எனவே, நாட்டில் 5வது அலை ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அத்தனை மக்களுக்கும் எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri