கம்மன்பிலவை விலகுமாறு கோரி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பது நாடகமில்லை - சாகர காரியவசம்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கடிதம் அனுப்பி விட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்ப்பது நாடகமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டுமென பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எழுத்து மூலம் கோரியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென கடிதம் அனுப்பியது மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லவா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன் போது அது நாடகமல்ல எனவும், கட்சியின் நிலைப்பாட்டையே தாம் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிக்கு தேவையானவாறு உதய கம்மன்பிலவை பதவி விலக்க ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி என்ற அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளின் விலையை குறைப்பதற்கு சந்தர்ப்பம் உருவாகியதும் நிச்சமயாக எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படும் எனவும் இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் உறுதிபடுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri