எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது: ஜனாதிபதி சூளுரை

Kurunegala Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Rakesh Feb 04, 2025 01:08 PM GMT
Report

எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது.எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது என  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முற்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குருநாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பாடசாலை மாணவனின் நற்செயல்

முல்லைத்தீவு பாடசாலை மாணவனின் நற்செயல்

அரசியல் பழிவாங்கல்

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்க அரச வதிவிடத்தைக் கையளித்துவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி.

எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது: ஜனாதிபதி சூளுரை | Opponents Can Never Defeat Us President Anura

கோட்டாபய ராஜபக்ச, ஹேமா பிரேமதாஸ ஆகியோரும் வதிவிடத்தை ஒப்படைத்துவிட்டனர். ஆனால், மூவர் மாத்திரம் கையளிக்க மறுக்கின்றனர். பணம் இல்லாமல் இல்லை, ஆனால் அதிகாரத்தையும், சுகபோகத்தையும் கைவிட அவர்கள் தயாரில்லை. மக்கள் பணத்தை வீணடித்தேனும் வாழ நினைக்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது.

இந்தக் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.அதனை நாம் செய்யும்போது அரசியல் பழிவாங்கல் என்கின்றனர். ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர், தனது மாத சம்பளத்தைக்கூட வங்கியில் இருந்து பெற மறந்துள்ளார். கடைசியில் அவரின் பிரத்தியேக செயலாளர் அந்த பணத்துக்கு வேட்டு வைத்துவிட்டார்.

வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்: ஜனாதிபதி உறுதி

வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்: ஜனாதிபதி உறுதி

மக்களின் பங்களிப்பு

அப்படியானால் இவர்களிடம் பணம் இல்லையா பாரிய வீடுகளை வழங்கமாட்டோம். செல்வதற்கு வழியில்லை என்றால் இருவர் வாழக்கூடிய அளவிலான வீடொன்றை வழங்குவோம். அதேவேளை, எமக்குப் பல சவால்கள் உள்ளன. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது: ஜனாதிபதி சூளுரை | Opponents Can Never Defeat Us President Anura

எனினும், அவர்கள் (எதிரணிகள்) குழப்பமடைந்துள்ளனர். அரசொன்று ஆட்சிக்கு வந்து நிலையான நிலைமையை ஏற்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும். அந்த காலப்பகுதிக்குள் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர்.

கடந்த காலங்களில் பல அணிகள் இருந்தன. எல்லாம் ஒன்றாக இணைந்துவிட்டனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது. மக்கள் எமது பக்கம் உள்ளனர் . எமது பயணத்துக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள். வெற்றியை நோக்கி செல்ல தமது பங்களிப்பை வழங்குவார்கள்  என்றார்.

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US