சர்ச்சைக்குரிய ONMAXDT நிறுவனத்தின் மோசடி: வீடுகளை சுற்றிவளைத்த மக்கள்
இரத்தினபுரியில் சர்ச்சைக்குரிய ONMAXDT என்ற பெயரில் இயங்கும் பிரமிட் வலையமைப்பில் பணம் வைப்பிலிடப்பட்ட பிரதேசவாசிகள் சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்பிலிபிட்டிய, அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் பிரதேசவாசிகளிடம் பணம் பெற்ற முகவர்களின் வீடுகளை சுற்றிவளைத்துள்ளனர்.
அகுனுகொலபலஸ்ஸ, லுணுகம்வெஹர பிரதேசங்களில் உள்ள முகவர்களின் வீடுகள் இன்று சோதனையிடப்பட்டுள்ளன.
பண மோசடி
நாளுக்கு நாள் பணம் தருவதாக கூறி ஏமாற்றி இந்த முகவர்களால் பணம் பெற்றவர்களை தவிர்த்து வருவதாக சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பண வைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், பெருமளவிலான மக்களின் பணத்தை அபகரித்துள்ள சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள், பணம் மற்றும் பணத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வேறு நபர்களின் பெயரில் உள்ள கணக்குகளில் அல்லது இரகசியமாக மறைத்து வைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
எனினும் மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
