யோகாசன பயிற்சியின் ஓராண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்
முல்லைத்தீவு மாவட்டத்தினை பூர்வீகமாகக் கொண்ட தற்போது பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் யோகா பயிற்சி ஆசிரியர் அல்பிரட் விக்டர் டலஸ் பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் ஊடாக யோகா பயிற்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் முல்லைத்தீவிலிருந்து பயிற்சி பெற்று வந்த மாணவி செல்வி ஜே.ருபேன்ஷா ஓர் ஆண்டை பூர்த்தி செய்த நிலையில் ஓராண்டு பூர்த்தி நிகழ்வும் குறித்த மாணவிக்கான பட்டமளிப்பு நிகழ்வும் இன்று(28) முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய நிர்வாக உத்தியோகத்தர் ரெஜிஸ் விமலேந்திரன், முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அருட் சகோதரி ரி.வெனிகலாமேரி உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு குறித்த மாணவி மற்றும் ஆசிரியரை கௌரவித்தனர்.







