தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57/2 மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெற்று பியர் போத்தல்களுடன் நேற்று காலை மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கனரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியே உறங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த வாகன உதவியாளரின் சடலம் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கனரக வாகனம் கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனவும்
சாரதி மற்றும் உதவியாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார்
கூறியுள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
