சம்மாந்துறையில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது
காரைத்தீவில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சிய ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று (08) காரைதீவு பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும், உப பொலிஸ் பரிசோதகருமான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. எஸ். ஜெயலத்தின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் காரைத்தீவு எட்டாம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும், 40 கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.