திருகோணமலையில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழப்பு
திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி நபரொருவர் இன்று (19.09.2022) உயிரிழந்துள்ளார்.
திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் சுப்ரமணியம் (வயது 49) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனை பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.