‘‘ஜனாதிபதியின் பிழைத்திருத்தங்களில் தேசிய மொழிகொள்கையும் உள்ளடங்கலாம்’’
நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்றைய தினம் இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஒர் அங்கமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ மைதானமொன்றை அனுராதபுரத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்த மைதான அங்குரார்ப்பண நிகழ்வின் போது பெயர்ப் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டரங்கமாக இருக்கலாம்! விளையாட்டாகவே இருக்கலாம்! அன்னை இலங்கையின் பேரில், முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழிக்கொள்கையை பின்பற்றனும். அடுத்த மூன்று வருடங்களில் @GotabayaR செய்யப்போகும் "பிழைதிருத்தங்களில்" மொழிகொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாய் இருக்க பிரார்த்திக்கிறேன் #lka #மனோ pic.twitter.com/gMgW6mCsy7
— Mano Ganesan (@ManoGanesan) October 10, 2021
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இந்த பெயர்ப் பலகையில் குறித்த விளையாட்டரங்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த்து. இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து தேசிய மொழிகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கை அரசியல் அமைப்பின் மொழிக்கொள்கையை முதல் பிரஜை பின்பற்ற வேண்டும் எனவும், மூன்றாண்டுகளில் பிழைய திருத்திக்கொள்வார் என அவரது பதிவு வருமாறு “விளையாட்டரங்கமாக இருக்கலாம்! விளையாட்டாகவே இருக்கலாம்! அன்னை இலங்கையின் பேரில், முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழிக்கொள்கையை பின்பற்றனும்.
அடுத்த மூன்று வருடங்களில் செய்யும் பிழைத்திருத்தங்களில் தேசிய மொழிக் கொள்கை பின்பற்றலும் உள்ளடங்க வேண்டுமென பிரார்த்திப்பதாகத் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். @GotabayaR செய்யப்போகும் "பிழைதிருத்தங்களில்" மொழிகொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாய் இருக்க பிரார்த்திக்கின்றேன்”என்றுமு் தெரிவித்துள்ளார்.