வவுனியா - ஓமந்தையில் தொடருந்து மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு
வவுனியா - ஓமந்தையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(10.09.2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று மாலை பயணித்த தொடருந்தானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது தொடருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது தொடருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த பெண் சுமார் 35 - 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri
