கொழும்பில் ஆறுமுகம் துஷ்யந்த் சுட்டுக் கொலை
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு - மட்டக்குளிய, ரண்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
'பட ரஞ்சி' அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
தேசிய வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் போதைப்பொருள் விற்பனையாளரான 'புகுதுகண்ணா' என்பவரின் நிதி நிர்வாகியாக உயிரிழந்த நபர் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தத்துள்ளனர்.

''நேற்றிரவு 8.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது மார்பு மற்றும் இடது கையில் துப்பாக்கி குண்டுகள் காணப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் கும்பலினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம்'' என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri