மாத்தளை இரத்தோட்டையில் நடந்த துப்பாக்கிச் சூடு
மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபர், மற்றுமொருவர் பயிரிட்டிருந்த மிளகு தோட்டத்திற்கு அனுமதியின்றி சென்றுள்ளதாகவும் அவரை நோக்கி தோட்ட உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர், துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தனது தோட்டத்திற்குள் காட்டு பன்றி வந்துள்ளதாக நினைத்து துப்பாக்கி பிரயோகம் செய்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.