வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் காயம்
வவுனியா (Vavuniya), மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினமான நேற்று (14.04.2024) மாலை வவுனியா, மாமடு - கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர் பயணித்த போது வீதியில் நின்ற யானை குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
விசாரணைகள்
பின்னர் வீதியால் சென்றோர் தாக்குதலுக்குள்ளான நபரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.