தெஹிவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
தெஹிவளை - ரத்னாகர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
லுனுகல - யாப்பம்மா, ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த சஜின் குமார ஜயவர்தன முதியசெல (வயது 26) என்பவரே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணைகள்
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள மூன்றாவது மாடிக்கு மின்சாரம் எடுப்பதற்காக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.