அரசகரும மொழிகள் தினம் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு
அரசகரும மொழிகள் தினத்தினை நடைமுறைப்படுத்தும் முகமாக ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வானது, நேற்று (25.07.2024) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அரசகரும மொழிகள் வாரம் மற்றும் தினத்தினை முன்னிட்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இதன் முதல் நாள் நிகழ்வாக, அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழிக்கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |